Wednesday, April 05, 2006

விளையாட்டு

"எனது மகனை கொல்ல போகிறேன்".

முதலில் அந்த மின்னஞ்சலை மற்ற விளையாட்டு (கிறுக்கு ) அஞ்சலாக ஒதுக்கி விட நினைத்தாலும், மனம் ஒப்பாமல் அதனை குற்றப் பிரிவு அதிகாரியின் பார்வைக்கு அனுப்பினார் அந்த அதிகாரி.வழக்கமாக செய்ய வேண்டிய கையெழுத்துகள் பறிமாற்றத்துக்கு பின் அந்த அஞ்சல் அனுப்பப்பட்ட IP ADDRESS பின் தொடரப்பட்டு, அவரது அடையாளங்கள் ஆராயப்பட்டு, அவருக்கு ஒரு மகன் இருப்பதும், அவருக்கு மனநிலை சரியில்லை என்பதும் கண்டுபிடிக்க மூன்று நாட்கள் ஆனது.

அவரது வீட்டின் சோதனையில் அவரை பற்றி கேள்வி பட்டவை உருதியாயின. ஆனால் அவரும், அவரது மகனும் வீட்டில் இல்லை.சில பல போலீஸின் சாதுர்யத்தால், அந்த மறைவிடம் கண்டு பிடிக்கப்பட்டது.

வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது அங்கே அந்த தந்தையாகபட்ட மனிதர் உட்கார்ந்து கொண்டு ஏதோ படித்துக்கொண்டிருந்தார். போலீஸை பார்த்தவுடன் பதறாமல் எழுந்தார். பிறகு, "நான் சொல்ல வில்லையா மோகன்? போலீஸ் எப்படியும் நம்மை கண்டு பிடித்து விடுவார்கள். இதோ அவர்கள் வந்து விட்டார்கள்." என்றபடி அடுத்த அறைக்குள் சென்றார்.

போலீஸ் மெதுவாக அந்த அறையை அடைந்த போது "போதும் மோகன் ! இது என்ன விளையாட்டு ? நீ தான் தோற்று விட்டாய் அல்லவா? பிறகு ஏன் இன்னும் எழ மறுக்கிறாய்? பாருங்கள் Sir ! நாங்கள் சும்மா தான் விளையாடினோம்." என்றபடி யாரையோ எழுப்ப முயன்று கொண்டிருந்தார்.

எட்டி பார்த்த போலீஸ் அதிகாரியின் கண்களில் அந்த சிறுவனின் பிணம் தெரிந்தது.

1 comment:

Anonymous said...

gokeee...
umadu pulamayum...
blogum valara...
engaladu asigal...

-ananth