முரளியின் டைரி 12/3/2001
இன்று எங்கள் ஆபீஸில் உலக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. புரியவே இல்லை. எதற்காக இதை கொண்டாடுகிறார்கள் என்று. கொண்டாடுகிறோம் என்பதை தெரிவிக்க அந்த கூத்துக்களை புகைப்படம் வேறு எடுத்துக் கொண்டார்கள். புகைப்படம் என்பது நிஜங்கள் நினைவுகளான பின் நினைத்துப் பார்க்க உதவும் நினைவுகள். ஆனால், இங்கே எடுக்கப் படுபவை நிஜங்களா ? சாய்ந்து கொண்டு, சிரித்துக்கொண்டு, வித்தியாசம் என நினைத்து முட்டாள் தனமான செய்கைகள் செய்து கொண்டு, கேமிராவிற்கு பயந்து அது புகைக்கும் வரை பவ்யமாக பணிந்து நின்று கொண்டிருப்பது என இவர்கள் செய்யும் அனைத்துமே முட்டாள் தனமானவையே.
முரளியின் டைரி 14/3/2001
இந்த விளையாட்டுப் போட்டிகளில், அதுவும் முக்கியமாக கிரிக்கெட் போட்டிகளில் புகைப்படங்கள் எடுப்பது என்பது அவசியம் என்றே எண்ணிக்கொண்டிருந்தேன். இன்றைய செய்தித்தாளை பார்த்த பின்னே அதன் உண்மையான அர்த்தம் விளங்கிற்று. மூன்று வாரத்திற்கு முன்பு நடந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற விளையாட்டு வீரனின் புகைப்படம் (அவர் பயிற்சியில் இருந்த போது). அவர் அற்புதமாக விளையாடியது உண்மையென்றாலும் அவரது புகைப்படம் அங்கே ரொம்ப அவசியமா?
இது இவ்வளவு முட்டாள்தனம் என தெரிந்தும் சாகருக்கு இன்று ஒரு காமிரா வாங்கி கொடுத்தேன்.
சாகரின் டைரி 11/3/2001
இன்று முரளி என் காமிராவை தொலைத்து விட்டான்
சாகரின் டைரி 14/3/2001
எவ்வளவு வற்புறுத்தியும் முரளி கேட்காமல் இன்று ஒரு புது காமிரா வாங்கி கொடுத்தான்.
என்னை கதை எழுத தூண்டிய (உசுப்பேத்திய) அன்பு நண்பனின் வேண்டுகோளுக்கிணங்க, அவனது ஆசைப்படியே கதை சில டைரிப்பக்கஙள் மூலமாக.
Monday, April 10, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வித்யசமான முயற்சி ...
வெற்றி பெற வாழ்த்துக்கள்
pretty good da.
Post a Comment