Sunday, October 29, 2006

கதை கதையாம் காரணமாம் (அ) ஒரு முடிவில்லாத நீதிக் கதை.

"குமார்", பாட்டி கூப்பிட்டாள். " நேரம் ஆரதொன்னொ தூங்க வா!"
"இன்னும் 10 ஒவெர் தான் இருக்கு. முழுசா பாத்துட்டு வரேனே!"
"காலைல முழிப்பு வராம தவிப்ப. ஸ்கூல் போ வேண்டாம நாளைக்கு?", கண்டிப்பான குரலில்.
"கொஞ்ச நேரம் பாட்டி, 2 ஒவெர் பாத்துட்டு ஓடி வந்துடரேன்"
"எனக்கு என்ன? நான் தூங்கி போரேன். அப்பரம் பக்கத்துல வந்து படுத்துண்டு கதை சொல்லுனா என்னால முடியாது!"


"அட! யாருடா இது?", பொய் ஆச்சரிய்த்தோட பாட்டி என்னை தொட்டு பார்த்தாள். கதைனு சொன்ன உடனே டிவிய அப்படியே அனைச்சுட்டு பாட்டிக்கு முன்னாடி வந்து பாய் போட்டு படுத்துண்டுட்டேன். பாட்டி ரூம்முக்குல்ல வந்து என்ன பாக்காத மாதிரி போய் லைட்ட அனைச்சுட்டு வந்து பக்கத்துல உட்கார்ந்தா. புடவ நுனிய எடுத்து கழுத்த சுத்தி துடைசுன்டு அதால விசிரின்டே என்னை ஒரு கய்யால் தடவி அடையாளம் பாத்தாள்.

"கத சொல்லு!"
"பக்த மீரா கதை சொல்லரேன் கேக்கறியா?"
"வேண்டாம் வேண்டாம்! மகாபாரதம் சொல்லு. எப்படி சன்டை பொட்டா சொல்லு?"
"க்ரிஷ்ணன் கதை டா. மீரா பத்தி சொல்லரேன் கேலு."
"அய்யோ வேண்டாம் பாட்டி. மகாபாரதம் சொல்லு. அதுவும் க்ரிஷ்ணன் கத தான்"
"மீரா கதை குட்டி கத டா. முழுசா சொல்லுவேன். மகாபாரதம் எப்படி முழுசா சொல்ல முடியும்?"
"பரவா இல்ல பாதி சொல்லு பொதும்"
"பாதி போதுமா?! அபிமன்யுவா நீ?", தலையில் செல்லமாய் தட்டினாள்.

"அபிமன்யு யாரு?"
"அபிமன்யு பத்தி சொன்னதில்லயா நான்? அவன் தான் அர்ஜுனன் புள்ளை"
"சொல்லு சொல்லு", பாட்டிய இருக்க கட்டிண்டேன். ஈரப் புடவை ஜில்லுனு இருந்துது.
"அபிமன்யு, அர்ஜுனனுக்கும் சுபத்திரைக்கும் பிறந்த கொழந்தை. சுபத்தரா க்ரிஷ்ணனொட தங்கை." பாட்டி எப்பவும் க்ரிஷ்ணரை மட்டும் ரொம்ப ரசிச்சு ரசிச்சு சொல்லுவாள். க்ரிஷ்ணர ரொம்ப உரிமையா, செல்லமா அவன் இவன்னு தான் கூப்பிடுவாள். என்ன கதை சொன்னலும் அதுல க்ரிஷ்ணருக்கு ஒரு தனி கதை இருக்கும். க்ரிஷ்ணன் எது பண்ணினாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கும் அப்படினு சொல்லுவாள்.
"அப்போ சுபத்தரா கர்பமா இருக்கரப்பொ ஒரு நாள்..."
"கர்பம்னா? உமா சித்தி மாதிரியா?"
"ஆமாம்"
"சித்திக்கு எப்ப குழந்தை பொரக்கும்?"
"இன்னும் 4 மாசம் ஆகும். கதைய கேலு. சுபத்தரா அபிமன்யுவ கர்பமா இருன்தாளா, அப்பொ ஒரு நாள் க்ரிஷ்ணன் தான் தங்கயை பாக்க போனான். அப்பொ சுபத்தரா குமாரு மாதிரி கத சொல்லு கத சொல்லுனு புடிங்கி எடுத்தாளா. யாரானு கேட்டா க்ரிஷ்ணன் இல்லனு சொல்லலாமோ? அவன் கடவுள் இல்லையோ? நியாபகம் இருக்கா திரௌபதி கதை. புடவ கேட்டவுடனே, உடனே வந்து நிருத்தாம கொடுத்துண்டெ இருந்தாரே!"
"ஆன்.. ஆன்... பெட்ல தோத்த அப்பொ"...
"அதேதான்! அதுனால க்ரிஷ்ணன் என்ன பன்னினான் கதை சொல்ல ஆரம்பிசான். என்ன கதை? நீ கேட்ட மாதிரி சன்டை கதை. சக்கரவ்யுகம் எப்படி கட்டனும். அதுல
காளாட்படை எங்க நிக்கனும், கத்தி வெச்சுண்டு இருகரவா எங்க நிக்கனும், குதிரை ஆளெல்லாம் எங்க நிக்கனும்..."
"யானை..."
"யானை இல்லாமலா... அந்த வ்யுகத்த எப்படி உடைச்சுண்டு உள்ள போரது..."
"எப்படி அட்டாக் பண்ணனும்னு சொன்னாரா?"
"எப்படி அட்டாக் பண்ணரதுனு சொன்னானா, அப்பொ பார்த்தா சுபத்தரா தூங்கி பொய்ட்டா.... ஆனா "உம்...உம்"னு யாரொ உம் கொட்டர சத்தம் ஒன்டி கேட்டுன்டெ இருந்தது.... அப்ப தான் க்ரிஷ்னன் பாத்தான்... அட நீ தானா அதுன்னான்? யாரு தெரியரதா?"

"அர்ஜுனன?"
"மக்கு. அர்ஜுனன் தான் அங்க இல்லையே.... சுபத்தரா வயத்துலேந்து அபிமன்யு உம் கொட்டிண்டிருந்தான்"
"வயத்துலேந்தா? குழந்தை தான் இன்னும் பிறக்கவே இல்லயே. அதுகு எப்படி வாய் இருக்கும்?"
"குழந்தேலுக்கெல்லாம் அம்மா வயத்துகுல்ல இருக்கரப்பொவே கை, கால், வாய், வயரு எல்லாம் வந்துடும்"
"நெஜமாவா... நானும் அப்படி தான் வந்தேனா"

"எல்லாரும் அப்படி தான்.... உம் கொட்டறது வயத்துகுல்லேந்து குழந்தை, சுபத்தரா இல்லேனு தெரிஞ்சவுடனே க்ரிஷ்ணன் என்ன பண்ணினான், கதை சொல்லறதை நிருத்திட்டான்"
"ஏன் நிருத்தினார். கொழந்தை தான் கத கேக்கரதே..."
"நன்னா இருக்கே கொழந்தை கதை கேட்டுண்டே தான் இருக்கும்... அதுனால பெரியவா கதை சொல்லிண்டே இருக்கனுமா?", பாட்டி விஷமமாக என்னை இடித்தாள்.
"ஆஅன்ன்ன்ன்", என்னை தான் சொல்லரான்னு புரிஞ்ஜின்டு நான் கொஞ்சலா சினுங்கினேன்... "நான் வுட மாட்டென்... செரி சொல்லு அப்பரம் என்ன ஆச்சு?"

"க்ரிஷ்ணன் என்ன பன்னினாலும் ஒரு அர்த்தம் இருக்கும்னு சொல்லி இருக்கேனா... க்ரிஷ்ணன நம்பு... நல்லதே நடக்கும்... இது முடிஞ்சு குழந்தை அபிமன்யு பிறந்து, வளந்து 16 வயசான அப்பொ பாண்டவாளுக்கும் கௌரவாளுக்கும் சன்டை வந்துடுத்து...மகாபாரத யுத்தம்"
பாட்டி கொஞ்சம் யோசிச்சாள்.... மூச்சு வாங்கினாள்...."பொழச்சு கெடந்தா மீதி கதை சொல்லரேன்"... பாட்டி எப்பொவும் நாளைக்குன்னு சொல்ல மாட்டா... "பொழச்சு கெடந்தா"னு தான் சொல்லுவா...
பாட்டி சொல்லற கதைக்கெல்லாம் பொதுவா ஒரு நல்ல முடிவு இருக்கும். க்ரிஷ்ணர் எதுக்காக அப்படி பண்ணினார்னு ஒரு நியாயம் சொல்லுவா. பாட்டி இந்த கதைய ஏன் பாதியில நிருத்தினாணு நான் ரொம்ப நாள் யோசிச்சு பாத்து இருக்கேன். பாட்டிக்கே க்ரிஷ்ணர் பண்ணினது நியாயம்னு படலையோ? ஒரு வழியில அபிமன்யு செத்ததுக்கு க்ரிஷ்ணர் தான் காரணம்னு தோணிடுத்தோ? இருக்காது. அப்படி பாத்தா மகாபாரதத்துல பாதி பேர் செத்ததுக்கு காரணம் க்ரிஷ்ணர் தான். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுங்கர கதை தான் மகாபாரதம். ஒவ்வொருத்தரோட விதிக்கும் அவர் தான் காரணம்ங்கர மாதிரி. ஆனா இந்த விஷயம் எனக்கு அப்போ புரிஞ்சு இருக்காது. பாட்டி என் மனசுல வளர்த்த அந்த க்ரிஷ்ணர் பத்தின எண்ணத்துல ஒரு கறை படிஞ்சு இருக்கும். ஒரு வேளை இது என்ன பதி இருக்குமோ? எப்பவும் சன்டைல கெட்டவா சாகர மாதிரி தான் கதை சொல்லி இருக்கா. அபிமன்யு சன்டைல செத்து போறது எனக்கு ரொம்ப நாள் தெரியாது. அன்னிக்கு அந்த கதைய பாட்டி அதுக்கு மேல எப்படி சொல்லி எனக்கு புரிய வெச்சு இருக்க முடியும்னு தெரியல. சில விஷயங்கல தெரிஞ்சுக்கிறத விட தெரிஞ்சுக்காம இருக்கறதே நல்லது. அப்படி பாத்தா இது ரொம்ப வித்தியாசமான நீதிக் கதை. ஒரு முடிவில்லாத நீதிக் கதை.

2 comments:

Anonymous said...

The wya the story is written has so many folds - The story as such, Story inside a story, The moral which Mahabarath brings, the moral which grand ma wants to bring, The moral which was understood by the grand son.... Good naration - Both by you and granda ma!

More plzzz!

gokee said...

sounded like hearing from a 10 yr kid. proud to have this post in m blog.